கேள் பெண்ணே..
கவிதைகள் பூக்கும் இந்த வெள்ளை காகிதத்தை கேள்..
என் காதலை அதனிடம் கிறுக்கிய தருணங்கள் சொல்லும்..
கனவுகளை எழுதும் என் பேனாவை கேள்..
உன்னை எழுத்துகளால் பிணைந்த என் பிரியத்தை சொல்லும்..
இரவில் நான் உறங்கும் தலையணையை கேள்
நான் விழித்திருந்த விவரங்கள் சொல்லும்..
உன் தோள் என்று நான் சாயும் என் வீட்டுக் கதவினை கேள்..
உன்னுடன் நான் கனவினில் வாழ்ந்த காலங்கள் சொல்லும்..
வானில் காயும் நிலவை கேள்..
உன் பெயர் சொல்லி அழுத இரவுகளை சொல்லும்..
உயிரில்லாத இவற்றை கேட்கும் முன் பெண்ணே
என்னிடம் கேள்..
உனக்குள் நான் தொலைந்த
அந்த கதையினை சொல்வேன் ...
என் காதலை அதனிடம் கிறுக்கிய தருணங்கள் சொல்லும்..
கனவுகளை எழுதும் என் பேனாவை கேள்..
உன்னை எழுத்துகளால் பிணைந்த என் பிரியத்தை சொல்லும்..
இரவில் நான் உறங்கும் தலையணையை கேள்
நான் விழித்திருந்த விவரங்கள் சொல்லும்..
உன் தோள் என்று நான் சாயும் என் வீட்டுக் கதவினை கேள்..
உன்னுடன் நான் கனவினில் வாழ்ந்த காலங்கள் சொல்லும்..
வானில் காயும் நிலவை கேள்..
உன் பெயர் சொல்லி அழுத இரவுகளை சொல்லும்..
உயிரில்லாத இவற்றை கேட்கும் முன் பெண்ணே
என்னிடம் கேள்..
உனக்குள் நான் தொலைந்த
அந்த கதையினை சொல்வேன் ...


0 Comments:
Post a Comment
<< Home