உன் கண்கள்...

நினைவுகளை உழன்று
சிந்தனை துளிகளை விதையாக்கி
உனக்காக இந்த வெள்ளைத் தாளில் பயிரிட்டேன்
என் கவிதை சொற்களை ...
எழுதிய கவிதையை ..
அழகாய் படித்து
அலங்காரமாய் மடித்து
உன்னை காண ஓடோடி வந்தேன்..
கண்டேன் உன் கண்களை..
உன் கண்களுக்கு முன்
என் கவிதையை அவமதிக்க மனமின்றி
இந்த முறையும் தோற்று போய் திரும்பினேன்
அடுத்த முறையேனும்
உன் கண்களுக்கு பதில் சொல்லும்
ஒரு கவிதையை எழுத....!!!!
Labels: minnal vega kavidhai..

