மறக்க முடியுமா ?!?!
என் இதயத்தில் உன்னை செதுக்கியதை..
என் கண்களுக்குள் உன்னை புதைத்து
அதில் நீ உன்னை கண்டதை...
மொட்டை மாடி உச்சி வெயிலில்..
என் நிழலில் நீ இளைப்பாரியதை..
அதிகாலை நேரங்களில் கூவும் குயிலாய்
தொலைபேசியில் என்னை அழைத்ததை ..
கடல் நுரைகளில் கால் நனைத்து..
படகடியில் அமர்ந்து பேசியதை..
கடல் மணலில் உன் பெயர் எழுதி..
கவிதை எழுதியதாய் நான் உரக்க கத்தியதை
நிலவு வரும் பொழுது உன் நினைவு வரும் என்றதும்
என் தலையில் செல்லமாக நீ குட்டியதை..
எப்படி முடிகிறது உன் இதயத்தால் மட்டும்
இத்தனையும் மறக்க..
இரவல் தந்து விடு உன் இதயத்தை..
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்
உன்னை மறக்க..........



